வேகத்தடை அமைக்க கோரிக்கை

 

சாயல்குடி, செப்.25: முதுகுளத்தூர் அருகே மட்டியரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள தேவாலயம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பஸ் ஏறிச் செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். இதுபோன்று தெருக்குழாய்களில் பெண்கள் குடிநீர் பிடித்து தள்ளுவண்டியில் குடங்களை வைத்து தள்ளிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமச் சாலையில் அதிவேகமாக வரும் லாரி,கார் உள்ளிட்ட வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிராமமக்கள் நலன் கருதி மட்டியரேந்தல் கிராம சாலையில் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை