வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.25 ஆயிரம் வரைவோலை: மாவட்ட கவுன்சிலர் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம்  8வது வார்டு  மாவட்ட குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ், வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரத்தை வரைவோலையாக ஆர்த்தியிடம் வழங்கினார். அப்போது, தன்னை போன்ற  மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யும்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் சார்பாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.அவருடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்