வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

 

ஈரோடு, செப்.13: ஈரோடு சென்னிமலை வடக்கு ஒன்றியம் வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில் சென்னிமலை ஒன்றிய தலைவர் காயத்ரி இளங்கோ, குமாரவலசு ஊராட்சி தலைவர் இளங்கோ, வடமுகம் வெள்ளோடு ஊராட்சி தலைவர் வாசுகி ஜெகநாதன், குட்டப்பாளையம் ஊராட்சி தலைவர் ரேணுகாதேவி குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராஜ், பேபி முருகேசன், கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி