வெள்ளிச்சந்தை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

குளச்சல்,செப்.26: வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(40). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபு (37) அடிக்கடி பிரபாகரன் வீட்டில் சென்று தகராறு செய்வாராம். நேற்று முன்தினம் பிரபாகரன் வீட்டில் இருக்கும்போது பிரபு மீண்டும் வந்து தகராறு செய்தார். இதனை பிரபாகரன் அண்ணன் மனைவி அனிமோள் என்ற உஷா(34) கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த பிரபு அரிவாளால் பிரபாகரனை வெட்டினார். இதனை தடுக்க சென்ற உஷாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் பிரபு மற்றும் அவரது மனைவி சகாய தர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா