வீரவநல்லூர், செப். 14: வீரவநல்லூர் அருகே வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தளவாய் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர் கலந்துகொண்டு 61 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வெள்ளங்குளி ஊராட்சி தலைவர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி சூரியா, முதுகலை ஆசிரியர்கள் மகேஷ், டெய்சி ஜாய்ஸ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.