வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

திருப்பூர், ஜன.5: தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் சார்பாக, அவரது பிறந்த நாளையொட்டி திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அவைத்தலைவர் பி.எஸ்.மணி, மாநில பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் கட்டபொம்மு ராஜேஷ், மாநில துணை தலைவர் ரஞ்சித் மற்றும் நிர்வாகிகள் ராஜ், காட்டன் பாலு, சிவா, நவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கூலிபாளையம், பொம்மநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை