வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா

குமாரபாளையம், ஜூலை 13: இந்திய சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா குள்ளநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். தியாகி அழகுமுத்துக்கோன் படத்திற்கு பள்ளி குழந்தைகள் மலர் தூவி மரியாதை செய்தனர். தியாகியின் வரலாறு குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வினாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் நந்தகுமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாலு, ரேவதி, கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி