வீட்டை உடைத்து பணம் கொள்ளை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் சரவணன்(45). ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி கோமளா வீட்டை பூட்டி கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு  திறந்து கிடந்தது.அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ₹10,000 ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில் பொன்னேரி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல், நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றதும் குறிப்பிடத்தக்கது….

Related posts

கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி லாரியில் வைத்திருந்த ரூ.42 லட்சம் கொள்ளை: ஆயுதங்களுடன் காரில் வந்து கும்பல் துணிகரம்

வக்கீல் மண்டையை உடைத்த அதிமுக ஊராட்சி தலைவர் கைது

நள்ளிரவில் வீடு புகுந்து தந்தையை கொன்று மகளை கடத்திய வாலிபர்: சில்மிஷ தகராறில் போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெறிச்செயல்