தூத்துக்குடி, அக்.9: தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் மேலத் தெருவை சேர்ந்த சிவலிங்கம் மனைவி பால சரஸ்வதி (32). இவர் கடந்த 6ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 3 பவுன் தங்க நகைகள் திருடு போயுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சிப்காட் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி கேவிகேசாமி நகரை சேர்ந்த செல்வபெருமாள் மகன் அழகுராஜா (29) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
வீட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது
previous post