வீட்டில் 4 பவுன் நகை திருட்டு

 

கோவை, செப். 12: கோவை கணபதி காந்திமாநகரை சேர்ந்தவர் தங்கவேல். இவர் மனைவி சித்ரா (51). இவர் சங்கனூரில் உள்ள பாட்டில் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சித்ரா வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. சித்ரா இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை