Tuesday, October 1, 2024
Home » வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 550 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளம்பெண் கைது

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 550 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளம்பெண் கைது

by Ranjith

 

தண்டையார்பேட்டை, ஜன.28: ராயபுரம், வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக, வீட்டில் பதுக்கிய 550 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக இளம்பெண்ணை கைது செய்தனர். தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக மது கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனை முன்னிட்டு, முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைத்து சிலர் கள்ளசந்தையில் விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

அதன்படி ராயபுரம், மீனாட்சியம்மன்பேட்டை பகுதியில், கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ராயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் மீனாட்சியம்மன்பேட்டை பகுதியில் சோதனை செய்தபோது, ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதிக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அங்கிருந்து, 250 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த வீட்டில் இருந்த கமலி (24) என்பவரை கைது செய்தனர். இவர், வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன், ராயபுரம் மீனாட்சியம்மன்பேட்டை பகுதியில், 2000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. பெரம்பூர்: வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் முதல் தெரு பகுதியில் நேற்று கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த இடத்தில் இருந்து 300 மதுபாட்டல்களை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில், வியாசர்பாடி சுந்தரம் முதல் தெருவை சேர்ந்த விமலா(40) மற்றும் அவரது மகன் ஆகாஷ்(25) உள்ளிட்டோர் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதற்காக இவற்றை வாங்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து அவர்கள் தப்பித்து ஓடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi