திருவொற்றியூர்: மணலி, சின்ன சேக்காடு, தேவராஜன் தெருவை சேர்ந்தவர் ஜெயகோபி (45), மணலி சிபிசிஎல் நிறுவன ஒப்பந்த ஊழியர். கன மழை காரணமாக ஜெயகோபி வீட்டினுள் வெள்ளம் புகுந்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு மனைவி செந்தாமரையை, பக்கத்து தெருவில் வசிக்கும் அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஜெயகோபி மட்டும் வீட்டின் கட்டிலில் தூங்கினார். நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த இவர் கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்தார்….