வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

கடலூர், அக். 9: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மலை புதுநகரை சேர்ந்தவர் குப்பன் மகன் ராஜ்கமல் (24). இவர் கடந்த சில மாதங்களாக கடலூர் புதுப்பாளையம் திருமலை நகரில் ஒரு வீட்டை வாடகை எடுத்து அங்கு தங்கி இருந்தார். இவர் தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார், புதுப்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ராஜ்கமல், கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜ்கமலை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடியுடன் அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ராஜ்கமல் மீது கடலூர் முதுநகர், புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்கமலுக்கு கஞ்சா உபயோகப்படுத்தும் பழக்கம் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தனது வீட்டில் கஞ்சாவை உபயோகப்படுத்தி விட்டு மீதியை தூக்கி எறிந்துள்ளார். அதில் இருந்த ஏதோ ஒரு விதை ஒன்று கஞ்சா செடியாக முளைத்துள்ளது. இதை பார்த்த ராஜ்கமல் அதை பூந்தொட்டியில் வளர்த்து வந்துள்ளார்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு