வீட்டிற்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு

ஓசூர், ஜூலை 16: ஓசூர் பகுதியில் உள்ள நியூ டெம்பிள் லேண்டு அட்கோ பகுதிக்கு, உணவு தேடி புள்ளி மான் ஒன்று நேற்று வந்தது. அந்த மானை தெருநாய்கள் துரத்தியதில், அந்த பகுதியில் வசித்து வரும் பட்டு வளர்ச்சி துறையில் ஓய்வு பெற்ற முனிராஜ் என்பவரது வீட்டிற்குள் நுழைந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையின் வேட்டை தடுப்பு பிரிவினர், வலை போட்டு மானை பிடித்தனர். நாய்கள் துரத்தியதில் மானுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. பின்னர், அந்த மானுக்கு சிகிச்சை அளித்து, சானமாவு வனப்பகுதியில் விடுவித்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி