வீட்டின் முன் விளையாடிய சிறுமிக்கு பாலியல் தொல்லை: நேபாள சிறுவன் கைது

சென்னை: சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் ராணி (34), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 20ம் தேதி எனது 5 வயது மகள் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தாள். பிறகு சிறிது நேரம் கழித்து மகள் அழுதப்படி ஆடைகள் கலைந்த நிலையில் வீட்டிற்கு வந்தாள். அவளிடம் இதுபற்றி கேட்டபோது, பக்கத்து வீட்டில் உள்ள அண்ணா அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறி அழுதாள். எனவே, சம்பந்தப்பட்ட சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.புகாரின்படி, வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார், நேபாளத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவன் வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துப்புரவு பணி செய்து வருவது தெரியவந்தது. சம்பவத்தன்று வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று சாக்லெட் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.    …

Related posts

14 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கர்நாடகாவில் கைது

ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மகாராஷ்டிரா, குஜராத் கால்சென்டர்களில் சிபிஐ சோதனை: 26 சைபர் குற்றவாளிகள் கைது