வீடு புகுந்து திருடியவர் கைது

ஏரல், மார்ச் 6: சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (62). வாழை விவசாயியான இவர், கடந்த 3ம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் மீண்டும் வீடு திரும்பிய போது பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த ரொக்கப்பணம் ₹1 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து செல்லத்துரை சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ மம்முது வழக்கு பதிவு செய்தார். வைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமலதா விசாரணை நடத்தி செல்லத்துரை வீட்டு அருகிலுள்ள நேவீஸ் மகன் கட்டிட தொழிலாளியான தனேஷ் செல்வக்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ₹1 லட்சம் மற்றும் ₹20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை