நத்தம், ஜூலை 31: நத்தம் அருகே சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராசு(52). விவசாயியான இவர் கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைபற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.