விஷம் குடித்து வியாபாரி சாவு

விழுப்புரம், நவ. 19: தொழில் நஷ்டத்தால் பொம்மை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே அய்யங்கோயில்பட்டு பகுதிைய சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(55). இவர் பொம்மைகள் செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் நேற்றுமுன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி பானுமதி அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’