விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

ஈரோடு, ஜூன் 23: நம்பியூர் அடுத்துள்ள வேமாண்டம்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (85). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் பழனியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து குடித்து விட்டார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை