விஷம் குடித்து தொழிலாளி சாவு

திண்டுக்கல், ஜூன் 21: திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டியை சேர்ந்தவர் மரியசூசை (60). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனாலும் நோய் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மரியசூசை கடந்த ஜூன் 12ம் தேதி திண்டுக்கல்- நத்தம் சாலை பதனிகடை பிரிவு அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரியசூசை நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பாலசுப்பிரமணி, சிறப்பு எஸ்ஐ கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை