போடி, ஆக. 18: போடி இபி ஆபிஸ் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(43), விவசாயி. இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு மரியூர் கண்மாய் அருகே உள்ள சிறைக்காடு புலத்தில் சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த ஒரு வருடமாக தோப்பில் சரிவர விவசாயப் பணிகளை செய்யவில்லை. இதனால் போதிய வருமானம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் தோப்புக்குள் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போடி குரங்கணி காவல் நிலைய எஸ்.ஐ செல்லப்பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.