விவசாயியிடம் செல்போன் பறித்தவர் கைது

சாத்தான்குளம், ஜூலை 17: சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனை டிகேசி நகரை சேர்ந்தவர் முருகன்(51), விவசாயி. இவர், கடந்த 14ம் தேதி பன்னம்பாறை வள்ளியம்மாள்புரத்தில் உறவினரை பார்த்து விட்டு பைக்கில் வீடு திரும்பினார். பன்னம்பாறை விலக்கில் வரும்போது பின்னால் பைக்கில் வந்த 4 பேர், அவரை வழிமறித்து பன்னம்பாறை ஊருக்கு வழி கேட்டுள்ளனர். அவர் வழி கூறியபோது பைக்கில் வந்த வாலிபர்கள், இவரது பையில் இருந்த செல்போன் மற்றும் ₹500ஐ பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து முருகன் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ முருகேசன் வழக்கு பதிவு செய்தார். எஸ்ஐ சுரேஷ்குமார் விசாரணை நடத்தி செல்போன் பறித்து சென்ற வைகுண்டத்தை சேர்ந்த மாடசாமி மகன் மகேஷ் என்ற சூர்யா (21) என்பவரை கைது செய்தார். மேலும் 3 பேரை தேடி வருகிறார். தொடர்ந்து இச்சம்பவம் பற்றி பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்