Saturday, September 21, 2024
Home » விவசாயிகள் விவகாரத்தில் தற்போது வரை முடிவு எட்டப்படாதது வேதனை அளிக்கிறது : உச்ச நீதிமன்றம் கவலை

விவசாயிகள் விவகாரத்தில் தற்போது வரை முடிவு எட்டப்படாதது வேதனை அளிக்கிறது : உச்ச நீதிமன்றம் கவலை

by kannappan

புதுடெல்லி :வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளில் தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் முன்னதாக நடத்தப்பட்ட ஏழு கட்ட பேச்சுசாரத்தைகளும் தோல்வி அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் வரும் குடியரசு தினத்தன்று கட்டுப்பாட்டை மீறி டெல்லியின் உள்ளே நுழைவோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம், வன்முறை இல்லாமல் போராட்டம் நடத்தலாம் என கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டதோடு, பிரதான வழக்கை ஜனவரியில் விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமாக முன்வந்து கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, விவசாயிகள் விவகாரத்தில் தற்போது வரை எந்த முடிவும் எட்டப்பாடமல் இருப்பது கவலையாக அளிக்கிறது. இருப்பினும் அவர்களின் வேதனைகளை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது என தெரிவித்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில்,’அரசு தரப்பில் விவசாய அமைப்புகளுடன் பேச்சு வாரத்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னதாக நடந்ததில் பல்வேறு முன்னேற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம் என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு நிலைமையும் நாங்கள் அதாவது நீதிமன்றம் புரிந்து கொள்கிறது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். …

You may also like

Leave a Comment

nineteen − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi