விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம்: 27ம் தேதி நடக்கிறது

 

கரூர், செப். 25: மாவட்ட விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்: செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாமல் கலந்து கொண்டு, குறைகளை தெரிவித்து, பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிது. இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு