சென்னை: விவசாயிகளுக்கு இழப் பீடு கோரி 22ல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களிலும், வேறு சில மாவட்டங்களிலும் பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில், தாலுகா அலுவலகங்கள் முன்பு விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் 22ம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறும்….