விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கருவிகள்

கும்பகோணம், செப். 4: வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் பி-3 செயல்விளக்கத்தின் கீழ், வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு 2 பயனாளிகளுக்கு கை தெளிப்பான்களையும், 5 பயனாளிகளுக்கு தார்பாய்களையும், 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்கம் கிட்களையும், 1 பயனாளிக்கு பருத்தி கிட்டையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் ஒன்றியக்குழு துணைத்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், மாவட்ட திமுக பிரதிநிதி கரிகாலன், கும்பகோணம் அட்மா குழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், வேளாண்மை அலுவலர் அசோக்குமார், துணை வேளாண்மை அலுவலர் சாரதி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தனசேகரன், இளமதி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி