விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் ; 2 பேர் கைது

சோமனூர், ஜூலை 9: கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோமனூர் பகுதியில் உள்ள கடை வீதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் டோரா (30), அபிஷித் டோரா (27) ஆகிய இருவர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 87 நபர்கள் மீது 52 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 113.945 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து