விருதுநகர் அருகே அடுத்தடுத்து ரயிலில் பாய்ந்து நர்ஸ்- காதலன் தற்கொலை: மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீது கடிதத்தில் புகார்

விருதுநகர்: விருதுநகர் அருகே நர்ஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காதலனும் உடனடியாக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் அருகே கோட்டநத்தத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மகள் சோலைமீனா (22). விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். அப்போது எலெக்ட்ரீசியன் வேலை செய்யும் சாத்தூர் சிறுகுளத்தை சேர்ந்த பிரவீன்குமார் (26) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக மருத்துவமனையில் வேலை செய்த பெண்கள், சோலைமீனாவுடன் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த சோலைமீனா, நேற்று காலை பட்டம்புதூர் அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார்.சோலைமீனா உயிரிழந்த தகவல் அறிந்த பிரவீன்குமார், விருதுநகர் என்ஜிஓ காலனி அருகில் நேற்று காலை 11.30 மணிக்கு குருவாயூர் ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர் தனது கடிதத்தில், தங்களது சாவிற்கு மருத்துவமனையில் வேலை செய்யும் இரு பெண்கள், ஒரு ஆண் தான் காரணம் என 3 பேரின் பெயரை எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

நியோமேக்ஸ் நிதி நிறுவன வழக்கு விசாரணையை 15 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

உதகை அருகே யானைகள் நடமாட்டத்தால் அச்சம்: ரேஷன் கடையில் பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானையை அடர் வனத்தில் விரட்டக் கோரிக்கை