விருதுநகர், ஏப். 12: விருதுநகர் கட்டையாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பாக உரிய அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதாக பஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து எஸ்.ஐ கோபு தலைமையில் போலீசார் சோதனை நடத்திய போது சூலக்கரை வ.உ.சி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(42) மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து 87 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்பனை செய்த பணம் ரூ.7,380 பறிமுதல் செய்து கைது செய்தனர்.