விருதுநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

விருதுநகர், செப்.30: விருதுநகர் சின்னபேராலி ரோடு ரயில்வே பாலம் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக ரூரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்ஐ ராஜா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரோசல்பட்டி சுரேஷ்(24), சத்திரரெட்டியாபட்டி கார்த்திக்(30) ஆகிய இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 2 அரிவாள்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, அல்லம்பட்டி அனுமான் நகரைச் சேர்ந்த தனுஷ்(21) என்பவர் தனது வீட்டருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கிழக்கு போலீசார் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி