விராலிமலையில் 10ம்தேதி சிறப்பு முகாம் தடுப்பூசி செலுத்தாதவர்களை அழைத்து வர வேண்டும்-ஊராட்சி அமைப்பினருக்கு அறிவுறுத்தல்

விராலிமலை : கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அழைத்து வருமாறு ஊராட்சி தலைவர்கள், செயலர்கள், பணித்தள பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் (கிஊ), ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 45 ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பணித்தள பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்:தமிழக அரசு சார்பில் வரும் அக்டோபர் 10ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் விராலிமலை வட்டத்தில் 45 ஊராட்சிகளில், 53 மையங்களில் காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் முதல் தவணை ஊசி செலுத்தி கொண்டவர்களை இரண்டாம் தவணை ஊசி செலுத்துமாறும், முதல் முறை ஊசி செலுத்தாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் நேரிடையாக சென்று தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி அவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதில் கலால் மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் (குன்னத்தூர்), விராலிமலை தாசில்தார் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு