வியாபாரியை ஸ்குரூ டிரைவரால் தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 10: ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சேர்ந்தவர் மனோகரன்(36). முடி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவியின் அண்ணன் மணிகண்டன்(36). மனோகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் கேட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், மணிகண்டன் தரப்பினர், மனோகரனை ஸ்குரூ டிரைவரால் வயிற்றில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மனோகரன் கொடுத்த புகாரின் பேரில், ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்