வியாபாரியை மிரட்டியவருக்கு வலை

உடன்குடி,செப்.18: உடன்குடி மரியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜன் (54). வில்லிகுடியிருப்பில் இவர் தான் நடத்திவரும் ஓட்டலில் கடந்த 11ம்தேதி இரவு வியாபாரம் முடிந்தபிறகு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பண்டாரஞ்செட்டிவிளையை சேர்ந்த ஜெயராமனின் மகன் ராகுல் (30), ஆம்லெட் போட்டு தருமாறு கோரினார், ஆனால் கடையை மூடிவிட்டதால் ஆம்லெட் போட முடியாது என ராஜன் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், ராஜனுக்கு மிரட்டல் விடுத்துச் சென்றார். புகாரின்பேரில் வழக்குப் பதிந்த குலசேகரன்பட்டினம் போலீசார், ராகுலை தேடி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி