விமான நிலைய கட்டுப்பாட்டு அறை 400 ஜூனியர் எக்ஸிகியூடிவ் பணிக்கு தேர்வு: ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகளில் காலியாக உள்ள 400 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி துவங்கியது. சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநில விமானநிலையங்களில் ஏடிசி எனும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூடிவ் பணியிடங்களை நிரப்ப இந்திய விமானநிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, 400 காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியை துவங்கியுள்ளது. அதற்காக வரும் 15ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதிவரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு 27. இதற்காக www.aai.aero எனும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, ஊதியம், பயிற்சி உட்பட அனைத்து விவரங்களும் இந்திய விமானநிலைய ஆணைய வெப்சைட்டில் உள்ளது. கல்வி, வயது உள்ளிட்ட தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் என 2 மொழிகளில் மட்டுமே நடைபெறும். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை