விபத்தில் சிக்கிய பா.ஜ நிர்வாகியை நேரில் சந்தித்து வேலூர் இப்ராகிம் சந்தித்து ஆறுதல்

 

திருப்பூர், செப்.1: திருப்பூர் கொங்குமெயின் ரோடு பின்புறம் கே.ஜ.லே. அவுட் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சிவசங்கரி. வக்கீலான இவர், பா.ஜனதா மாநில இளைஞரணி பொதுச்செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் சிவசங்கரி விபத்தில் சிக்கியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து அவரை, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று திருப்பூருக்கு வந்த பா.ஜனதா சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், சிவசங்கரி வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை