சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையின்போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது: தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற ஆட்டோ, கார், வேன், டெம்போ, லாரி, பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களின் ஓட்டுநர்கள் விபத்து மரணம் அடைந்தால், குடும்ப தலைமையை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களின் வறிய நிலையினை கருத்தில் கொண்டு, இறந்தவரின் குடும்பத்திற்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்….