விபசார வழக்கில் துணை நடிகை கைது

ஏற்காடு: ஏற்காட்டில் தனியார் ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட திரைப்பட துணை நடிகையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் ஆன்லைன் மூலம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் செயல்படும் தனியார் சொகுசு ஓட்டலில் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக, ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரூரல் போலீஸ் டிஎஸ்பி., தையல்நாயகி தலைமையில், போலீசார் நேற்று பிரபலமான அந்த ஓட்டலில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த ரம்யா(27), என்பவரை கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், திரைப்படங்களில் துணை நடிகையாக ரம்யா நடித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து ரம்யாவை போலீசார் கைது செய்தனர். மேலும், விபச்சாரத்திற்கு உடந்தையாக இருந்ததாக, ஓட்டலின் மானேஜர் நடராஜன்(65), ரூம் பாய் ரஞ்சித்(23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆன்லைன் மூலம் விபசாரம் நடத்தி வரும் சஞ்சயை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்