விஜய்வசந்த் எம்.பி சரஸ்வதி பூஜை வாழ்த்து

 

நாகர்கோவில், அக்.23: விஜய்வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சரஸ்வதி தேவியின் அருள் உங்கள் வாழ்க்கையை அறிவாலும், ஞானத்தாலும், செல்வத்தாலும் நிரப்ப இந்நாளில் வாழ்த்துகிறேன். அழிவே இல்லாத கல்வி செல்வத்தை வழங்குகின்ற கலை மகளையும், செல்வங்களை வாரி வழங்கும் திருமகளையும், சரஸ்வதி பூஜை நாளன்று பக்தியுடன் வழிபடுவோம். நம்பிக்கையுடன் கூடிய நமது உழைப்பிற்கு துணை நிற்கும் கருவிகளை கடவுள் முன் படைத்து வழிபடும் ஆயுதபூஜை நாளில் நமது தொழில் சிறக்கவும், முயற்சிகள் வெற்றியடையவும் வேண்டுவோம்.

தீமைகளை வீழ்த்தி நன்மை வென்ற விஜயதசமி நாளில் சமூகத்தில் தலை தூக்கியுள்ள தீமைகளை அன்பாலும், நல்லுள்ளத்தாலும் வெல்வோம்.  இந்த பண்டிகை காலத்தில் இறைவன் அருள் நமது அனைவரது இல்லங்களிலும் நிறைவதாக. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகள். இவ்வாறு வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்