பெங்களூரு: விஜயபுரா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆன்லைன் உலர் திராட்சை வர்த்தக மையம் திராட்சை தொழிலை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர்த்தகம் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தரமான திராட்சைக்கு பெயர் பெற்றது விஜயபுரா மாவட்டம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 ஆயிரம் கிலோ திராட்சைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலும் விஜயபுரா உலர் திராட்சைகளுக்கு மவுசு அதிகம். விற்பனை செய்வதில் சில பிரச்னைகள் ஏற்பட்டதால் விவசாயிகள் ஆன்லைன் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
…