சென்னை: வேளாண் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது: உணவுப்பதப்படுத்தும் தொழிலை முன்னேற்றுவதற்காக, நடப்பு நிதியாண்டிலேயே, உணவுப் பதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு ஒன்று துவங்கப்படும். உணவுப் பதப்படுத்துதல் தொழில் துவங்க முன்வரும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில்,இதற்கென, மீன் பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என ஐந்து தொழில் கற்கும் மையங்கள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்….