வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி அனைத்துகட்சி கூட்டத்தில் மண் எடுப்பது குறித்து விவாதம்

சாமியமடம், பிப்.16: சாமியார்மடம் அருகே வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சியில் அனைத்துகட்சி கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜான்டென்சிங் தலைமை வகித்தார், துணைதலைவர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் சார்பில் பேருர் செயல் தலைவர் காட்வின் மனோ, திமுக பேரூர் செயலாளர் சுரேஸ், அதிமுக பேரூர் செயலாளர் மோகன் தாஸ் மற்றும் ஜாண்ஜாய் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முருங்கவிளையில் மலையில் மண் எடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இயற்கை வளங்களை அழிக்ககூடாது என்றும், இயற்கை வளங்களை அழிப்பதை தடுப்பதற்கு அனைவரும் சேர்ந்து கலெக்டரை சந்திப்பது என்றும், தொடர்ந்து இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக போரடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை