வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

விருத்தாசலம், ஜூன் 18: விருத்தாசலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் திருவாசகம் மகன் பாபு (40). இவரது வீட்டின் முன்பு அம்பேத்கர் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் ராகேஷ் (23) என்பவர் கடந்த 15ம் தேதியன்று இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்துள்ளார். இதனை பாபு தட்டிக்கேட்ட போது ராகேஷ் அசிங்கமாக திட்டியுள்ளார். மேலும் அதே வீட்டின் மாடியில் குடியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி மகன் மனோஜ்குமார் (28) என்பவர் ராகேஷ்க்கு ஆதரவாக வந்து என் நண்பனை நீ எப்படி திட்டலாம் என்று கூறி பாபுவை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாபு விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார், ராகேஷ் மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்