வாலிபர் தூக்கிட்டு தற்கொலைவாலிபர் தூக்கிட்டு தற்கொலை

நாங்குநேரி: மூன்றடைப்பு அருகேயுள்ள அ.சாத்தான்குளம் ரேஷன் கடை தெருவை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் முருகன் (22). இவரது பெற்றோர் ஆந்திராவில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இதனால் ஊரில் உள்ள வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்றுவந்த முருகன், கடந்த 27ம் தேதி இரவு தனது தாயாருடன் போனில் பேசினார். அப்போது அவரை தாயார் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த முருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்துவந்த மூன்றடைப்பு போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்