ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே மணிமங்கலம் கிராமம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தேவா (எ) தேவேந்திரன் (25). நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்பட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் மணிமங்கலம் காவல் நிலையம் அருகே வெட்டு காயங்களுடன் தேவா, சடலமாக கிடந்தார்.இதுதொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாவின் முன்னாள் நண்பர்கள் விக்கி (எ) விக்னேஷ் (23), சுகன் (எ) சுரேந்தர் (20), புளிமூட்டை (எ) சதிஷ் (20), சுதாகர் (21), ரைசுல் இஸ்லாமுல் அன்சாரி (22) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.அதில், 5 பேரும், தேவாவின் முன்னாள் நண்பர்கள். கஞ்சா போதையில் கடந்த 6 மாதங்களுக்கு முன், தேவா மற்றும் சுரேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பிரிவாக செயல்பட்டு கஞ்சா விற்பனை செய்தனர். சில நாட்கள் கழித்து தனியாக இருந்த தேவாவை சுரேந்தர், விக்கி ஆகியோர் தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த தேவா, கடந்த சில மாதங்களுக்கு முன், 2 பேரையும் தாக்கிவிட்டு தலைமறைவானார். கடந்த வாரம் மணிமங்கலம் வந்த தேவா, விக்கி, சுரேந்திரன், ரைசூல் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் சுரேந்தர் மற்றும் அவரது நண்பர்கள், தேவாவை கொலை செய்ய முடிவு செய்தனர்.அதன்படிகடந்த புதன்கிழமை இரவு, தேவா, கஞ்சா போதையில் படுத்திருந்தார். அங்கு சென்ற சுரேந்தர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….