வாலிபரை வெட்டிய வழக்கில் 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்

பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 60வது பிளாக் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (25), கடந்த 2017ம் வருடம் செப்டம்பர் மாதம் 10ம் தேதி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 62வது பிளாக் வழியாக நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த 3 பேர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், பணம் தர மறுத்ததால் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இந்த வழக்கில் அருண், ஜெகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (எ) விக்கியை (32) எம்கேபி நகர் காவல் நிலைய தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

யூடியூப்பில் அவதூறு கருத்து கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்

ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு வக்கீலுக்கு கொலை மிரட்டல்: 6 பேர் கைது

2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு: பெண் நிர்வாகியுடன் தொடர்பில் இருப்பது அம்பலம்