திருவாடானை: தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி(55). அதே ஊரை சேர்ந்த உறவினரான அன்பரசன்(36) கடந்த 2016ம் ஆண்டு ரேவதியிடம் அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் கேட்க வேண்டும் என்றதால், ஆத்திரமடைந்த அன்பரசன் கத்தியால் ரேவதி மற்றும் அவரது மகளை கிழித்து காயப்படுத்தியுள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு திருவாடானை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பிரசாத், குற்றம்சாட்டப்பட்ட அன்பரசனுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்தார்.