வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் கொழுந்து விட்டு எரியும் காட்டு தீ

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டு தீ கொழுத்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை உச்சியில் இருந்து லாலா ஏரி அடிவாரம் வரை  மஞ்சம்புல் உள்ளது. இந்த மஞ்சம்புள் முழுவதும் காய்ந்து மலை பகுதி முழுவதும் வறட்சியாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மர்மநபர்கள் வைத்த தீயாால் மலை முழுவதும் பரவியது. மலை பகுதியையொட்டி பல குடிசை வீடுகள் உள்ளதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வாணியம்பாடி வனச்சரக அலுவலர் இளங்கோ தலைமையிலான மேற்பட்ட வனப்பணியாளர்கள்  3 குழுக்களாக பிரிந்து  கிராமமக்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, 2வது நாளாக நேற்றிரவும் இந்த தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது….

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை