வாடகை கார்களை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் நூதன மோசடி: அறக்கட்டளை நிர்வாகி கைது

வேளச்சேரி: அடையாறு, கஸ்தூரிபாய் காலனியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் கார்த்தீஸ்வரன் (35). இவருக்கும், செங்கல்பட்டு பகுதியில் அறக்கட்டளை நடத்தி வரும் தாமோதரனுக்கும் (29) கடந்தாண்டு அறிமுகம் ஏற்பட்டது. தாமோதரன் மாத வாடகை ரூ.30 ஆயிரத்திற்கு 4 கார்களை கார்த்தீஸ்வரனிடம் பெற்றுள்ளார். ஆனால், வாடகை தராமல் ஏமாற்றியுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து, அடையாறு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் தாமோதரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, 4 கார்களையும் அடமானம் வைத்து, ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தாமோதரன் நண்பர்களான கருப்பசாமி பாண்டியன், செல்லப்பாண்டியன் ஆகியோரை கடந்த மாதம் கைது செய்தனர். தலைமறைவான தாமோதரனை நேற்று கைது செய்தனர். …

Related posts

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்