வாக்கு எண்ணும் மையத்தில் மருத்துவ முகாம்

 

தேனி, ஜூன் 5:தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடந்தது. மைய வளாகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு மருத்துவக் குழுவினர் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிறு உபாதைகளுக்கு தேவையான மருந்துகளுடன் கூடிய ஏற்பாடுகளுடன் மருத்துவ முகாமை நடத்தினர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்திருந்த அலுவலர்கள் முகவர்கள் உள்ளிட்டோரில் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட சிறு உபாதைகளுக்கு இம் முகாமில் மருந்துகளை வாங்கி சென்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை