வாகன ஒட்டிகள் அவதி: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோடபிஷேக பால்குட விழா

கும்பகோணம், ஜூலை 9: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோடபிஷேக பால்குட விழா நேற்று நடைபெற்றது.கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா மார்க்கெட் காய்கனி, இலை மற்றும் வாழை வியாபாரிகள் ஒருங்கிணைந்து நடத்தும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோடபிஷேக பால்குட விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டிற்கான விழாவை முன்னிட்டு மார்க்கெட்டில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் ஆலயத்தில் அதிகாலை விநாயகர் வழிபாடும், மகா கணபதி ஹோமமும், பூர்ணாஹூதியும் நடைபெற்று, சிறப்பு மகா அபிஷேக ஆராதனை நேற்று நடைபெற்றது. பின்னர், ஆலயத்திலிருந்து நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்களுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து மாங்குடி, கோணக்கரை உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலை அடைந்தது. தொடர்ந்து அங்கு சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி